Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பொற்ஜோதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ... மீனாட்சி கோயிலை காப்போம்!: நந்தவனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் தீ விபத்தை தடுக்க கடைகளை அகற்றுங்கள்: முதல்வர்
எழுத்தின் அளவு:
கோவில்களில் தீ விபத்தை தடுக்க கடைகளை அகற்றுங்கள்: முதல்வர்

பதிவு செய்த நாள்

14 பிப்
2018
01:02

சென்னை: கோவில்களில், தீ விபத்துகளை தடுக்க, தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், கோவில் மதில் சுவரை ஒட்டியுள்ள கடைகளை அகற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், விபத்துகளை தடுக்க, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. அதில், முதல்வர் வழங்கிய அறிவுரைகள் குறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில், முதுநிலை அந்தஸ்து உடைய பெரிய கோவில்களில், தீ தடுப்பு நடைமுறைகளை, உடனடியாக தணிக்கை செய்ய வேண்டும்.அதற்கு தேவையான வல்லுனர்கள் மற்றும் நிதி தேவை குறித்து, அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதை, தலைமைச் செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலர்கள் அடங்கிய குழுவிடம், இரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். அதை, அவர்கள் பரிசீலித்து, முதல்வரிடம் வழங்க வேண்டும்.கோவில் வளாகத்திற்கு உள்ளும், கோவில் மதில் சுவரை ஒட்டியும் அமைந்துள்ள கடைகளை, உரிய வழிமுறைகளை பின்பற்றி, அகற்ற வேண்டும்.மேலும், அவ்வாறு அகற்றப்பட்ட கடைகளை, வேறு இடங்களில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய வேண்டும்.முதுநிலை கோவில்களில், புராதன அடையாளம் பாதிக்காமல், தரமான மின் இணைப்பு தர வேண்டும்.பக்தர்கள், விளக்கு ஏற்ற எடுத்து வரும் நெய் மற்றும் எண்ணெய் ஆகியவற்றை சேகரித்து, பயன்படுத்த வேண்டும். தீ அணைப்பு கருவிகள் சரியாக உள்ளதா என, சோதனை செய்ய வேண்டும்.ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும். தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நியமிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தகால் முகூர்த்தம் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. உத்தரகோசமங்கை வராகி ... மேலும்
 
temple news
 பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகர பகுதியில் உள்ள வைணவத் கோவில்களில், 25 கருட சேவை ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar