பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், மஹாசிவராத்திரி விழாைவ முன்னிட்டு, நேற்று மாலை பிரதோஷ பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, நடந்த முதல்கால பூஜையில், சிவலிங்கத்துக்கு பால், எலுமிச்சை சாறு, தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர், பஞ்சாமிருதம், தேன், நெய், அரிசி மாவு, விபூதி ஆகியவற்றால் அபிேஷகம் செய்யப்பட்டது. அபிேஷக பூஜையை தொடர்ந்து, வெள்ளிங்கிரி ஆண்டவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் வளாகத்தில், இரவு, 10:00 மணிக்கு, பஜனை நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், 2:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜையும், இன்று காலை, 5:00 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது.மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.