புதுக்கோட்டையிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவுடையார்பட்டி, ஆதியில் சுயம்பு மூர்த்தமாக இருந்த சிவலிங்கத்தின் மீது பசு மற்றும் கன்றின் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியந்துபோன கரிகால்சோழனால் இத்தலத்தில் எழுப்பப்பட்டது. திரிபுரசுந்தரி சமேத திருமூலநாதர் கோயில். இங்குள்ள வெண்ணாற்றங்கரையில் தை அமாவாசை நாளில் நீராடி ஈசனை வழிபட்டால் பித்ருக்கள் ஆசி கிடைத்து சந்ததிகள் சிறக்க வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.