மதுரை, காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி மறைவையெடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில், இம்மையிலும் நன்மை தருவார் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விராட் இந்துஸ்தான் அமைப்பினர் செய்தனர். வி.எச்.பி., மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.