Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கர மடத்தின் 70வது மடாதிபதி ... திருக்கோஷ்டியூரில் மாசி தெப்ப விழா: பெண்கள் விளக்கேற்றி வழிபாடு திருக்கோஷ்டியூரில் மாசி தெப்ப விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபட்ட பெண்கள்
எழுத்தின் அளவு:
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபட்ட பெண்கள்

பதிவு செய்த நாள்

03 மார்
2018
11:03

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, பெண்களின் சபரிமலையான, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில், மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பல்லாயிரக் கணக்கான பெண்கள், பொங்கலிட்டு வழிபட்டனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது.

சிலப்பதிகார நாயகியான கண்ணகி, மதுரையை எரித்த பின், கேரளாவின், கொடுங்களூர் செல்லும் வழியில், திருவனந்தபுரம் அருகில், கிள்ளியாற்றின் கரையில் தங்கினார். அன்று இரவு, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவரின் கனவில் வந்து, தனக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என, கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கிள்ளியாற்றின் கரையில் கோவில் கட்டப்பட்டது.பிரசித்தி பெற்ற, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில், மாசி மாதத்தில், 10 நாட்கள் விரதமிருக்கும் பெண்கள், பவுர்ணமியும், பூரம் நட்சத்திரமும் இணைந்து வரும், 10வது நாளில், கோவிலின் முன் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். பெண்கள் மட்டுமே பங்கேற்கும், பொங்கலா என்றழைக்கப்படும், இந்த விழாவில், ஆண்களுக்கு அனுமதி இல்லை. கடந்த, 2009ல், 25 லட்சம் பெண்கள் ஒன்றுகூடி பொங்கலிட்டு வழிபட்டது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இந்தாண்டு, பவுர்ண மியும், பூரம் நட்சத்திரமும் இணைந்து வந்ததையடுத்து, நேற்று காலை, கோவில் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான பெண்கள் கூடினர். செங்கல் அடுப்பு வைத்து, மண்பானை அல்லது புதுப் பானையுடன் காத்திருந்தனர். கோவிலுக்கு முன் வைக்கப்பட்ட, பண்டார அடுப்பு எனப்படும் அடுப்பில், காலை, கோவில் மேல்சாந்தி வாமனன் நம்பூதிரி தீ வளர்த்ததும், பெண்கள் பொங்கலிட்டு, அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்தனர்.இந்த பொங்கல் விழாவில், கேரள கவர்னரின் மனைவி, சரஸ்வதி, பிரபல கவிஞர், சுகுதகுமாரி மற்றும் தடகள வீராங்கனை, பி.டி.உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவுக்காக, திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து சிறப்பு பஸ்களும், ரயில்களும் இயக்கப்பட்டன.தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த, பெண் போலீசார் உட்பட, 4,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar