கிருஷ்ணராயபுரம்: பாப்பகாப்பட்டி காளம்மன் கோவில் திருவிழாவில், சுவாமி கிராமத்தில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அருகே, பாப்பகாப்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், காளம்மன் சுவாமி என்ற பாரிவார சுவாமிக்கு ஆண்டுதோறும் குளிர்ச்சி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. சுற்றியுள்ள குப்பணம்பட்டி, மலையாண்டிப்பட்டி, கணக்கப்பிள்ளையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுவாமி நேரடியாக சென்று, பக்தர்களுக்கு தரிசனம் நடந்தது. ஊர் மக்கள் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர்.