கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோபசத்திரம் என்ற மலை மீது வெங்கடேஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள பெருமாளை அடையாளம் காட்டியது ஒரு காளைமாடு என்று சொல்லப்படுகிறது. எனவே இந்தக் கோயிலில் நந்தி சிலை வைத்து வழிபாடும் நடக்கிறது. இந்த பெருமாளிடம் முறையிட, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கிறதாம்!