பதிவு செய்த நாள்
23
மார்
2018
12:03
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலில், 35.63 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்து உள்ளது. காஞ்சியில் பிரசித்தி பெற்று விளங்கும், வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகவும், மிகவும் பழமையானதாகவும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. தினமும், ஏராளமான பக்தர்கள், இங்கு வந்து செல்கின்றனர்.உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை, ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படும். கடைசியாக, கடந்த ஆண்டு, அக்., 3ல் எண்ணப்பட்டது. அதன் பின், நேற்று முன்தினம், கோவிலில் உள்ள, 13 உண்டியல்கள் திறக்கப்பட்டு, சோளிங்கர் உதவி ஆணையர் ப.சுப்ரமணியன், நிர்வாக அறங்காவலர் மு.விஜயன், சரக ஆய்வர், ஜெ.சுரேஷ்குமார் மற்றும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில், காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 35.63 லட்சம் ரூபாய் ரொக்கமும், 63 கிராம் தங்கம், 325 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.