பதிவு செய்த நாள்
23
மார்
2018
12:03
திருத்தணி : திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அடுத்த மாதம், 8ம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான, தீ மிதி திருவிழா, நேற்று, காலை 6:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை, கணபதி, நவகிரக ஹோமம், கோ பூஜை, யாகசாலை பூஜை நடந்தது.நேற்று, காலை, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினசரி மூலவர் அம்மனுக்கு, காலை, 8:00 மணிக்கு, சந்தன காப்பு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.வரும், 28ம் தேதி, திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், அன்னதானம் மற்றும் இரவு திரவுபதி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. வரும், 30 ம் தேதி, சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம், அடுத்த மாதம், 8ம் தேதி காலை துரியோதனன் படுகளம், மாலை, 6:30 மணிக்கு, தீமிதி திருவிழா, 9ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, தருமர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.