Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி ... வடசென்னிமலை முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உருவாட்டி அம்மன் கோயிலில் பொங்கல் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2018
12:03

காளையார்கோவில்:காளையார்கோவில் அருகே உள்ள உருவாட்டி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா பிரச்னை குறித்து இருதரப்பு சமாதானக்கூட்டத்தில் புதிய முடிவு எடுக்கப்பட்டது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் கீழ் உள்ள இக்கோயிலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பங்குனி திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடந்தது அப்போது இரு தரப்பினர் மோதிக்கொண்டனர்.

அதன்பின் திருவிழாவில் பங்கேற்காமல் ஒதுங்கி விட்ட ஒரு தரப்பினர் தங்களுக்கும் மண்டகப்படி நடத்த அனுமதி வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திருவிழாவில் ஒரு நாள் அவர்களையும் மண்டகப்படி நடத்த அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இருதரப்பினர் பங்கேற்ற சமாதான கூட்டம் தேவகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன் மற்றும் திருவேகம்பத்துார் எஸ்.ஐ., உட்பட பலர் பங்கேற்றனர். அதில், ஆகம விதிப்படி 10 நாள் மட்டுமே திருவிழா நடத்த வேண்டும். தனி மண்டகப்படி கேட்டவர்கள் தரப்பில் 3 பேர் அனைத்து தரப்பினருடன் இணைந்து வரிவசூல் செய்து 7 ம் நாள் மண்டகப்படியை தேவஸ்தானம், வருவாய், போலீஸ் துறையுடன் இணைந்து நடத்துவது எனவும், அவ்வாறு திருவிழா நடைபெறாவிட்டால், உயர்நீதி மன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வருகிறது. வரும் மார்ச் 29 ல் காலை 5:00 மணிக்கு அம்மன் தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன், மேலாளர் இளங்கோ மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar