Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னை: மேற்கு மாம்பலம், காசி ... சென்னை கபாலீஸ்வரர் கோவில், பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் சூரிய, சந்திர வட்டத்தில் கபாலீஸ்வரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2018
02:03

சென்னை: கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, சூரிய, சந்திர வட்ட வாகனங்களில், சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் விழாவான,  (மார்ச் 23), காலை, 8:30 மணிக்கு, சூரிய வட்ட வாகனத்தில், கபாலீஸ்வரர் எழுந்தருளி, மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கற்பகாம்பாள், சிங்காரவேலர், நடன விநாயகர், சண்டேசர் ஆகிய மூர்த்திகளும், வீதியுலா வந்தனர். இரவு, 9:00 மணிக்கு, சந்திர வட்டம் வாகனத்தில், கபாலீஸ்வரரும்; கிளி வாகனத்தில், கற்பகாம்பாளும்; அன்ன வாகனத்தில், சிங்காரவேலரும், மாடவீதிகளை வலம் வந்தனர்.

பங்குனி விழாவின் மூன்றாம் நாளான,  (மார்ச் 24), காலை, 6:00 மணிக்கு, அதிகார நந்தி காட்சி, திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா, கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்ளி ரிஷப வாகனங்களில், சுவாமி வீதி உலா நடக்கிறது.

அன்னதானத்திற்கு அனுமதி அன்னதானம் வழங்குவது குறித்து, போலீசார் அறிவித்துள்ளதாவது:

பங்குனிப் பெருவிழாவின்போது, மாட வீதிகளில், அன்னதானம் வழங்குவதற்கு, காவல் துறையின் முன் அனுமதி அவசியம் பெற வேண்டும். தேர் திருவிழா, அறுபத்துமூவர் திரு விழாவின் போது, அனுமதி இன்றி அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் பாதுகாப்பு கருதியும், மாடவீதிகளில் ஏற்படும் கழிவுகளை கட்டுப்படுத்தவும், உணவு வீணாவதை குறைக்கும் நோக்கிலும், இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அனுமதியுடன், அன்னதானம் வழங்குவோர், இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; கழிவுகளை, முறையாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு போலீசார் அறிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar