பதிவு செய்த நாள்
28
மார்
2018
11:03
திருத்தணி: கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், நேற்று நடந்த முதல் நாள் சூர்ய பூஜையில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13, 14 மற்றும் 15ம் தேதிகளில், மூன்று நாட்கள் சூர்ய பூஜை நடக்கிறது. அந்த வகையில், நேற்று முதல் நாள் சூர்ய பூஜை நடந்தது. இதை முன்னிட்டு, காலை, 6:15 மணிக்கு, சூரியனின் ஒளிர்கதிர்கள், மூலவர் முருகப் பெருமானின் திருப்பாதம் மீது விழுந்தது. அப்போது, மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். இன்று, காலை, இரண்டாம் நாளில், சூர்ய ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனி மீதும், நாளை, மூன்றாம் நாள் மூலவரின் சிரசின் மீதும் சூர்ய ஒளிக்கதிர்கள் விழும்.