பதிவு செய்த நாள்
31
மார்
2018
12:03
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த, பிரமோற்சவ கருட சேவையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியநாயக்கன்பாளை யம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், பிரமோற்சவ விழாவின், ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் (மார்ச் 29)ல் மாலை, கரிவரதராஜ பெருமாள், கருட வாகனத்தில் வைரமுடி அணிந்து எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, நாளை(ஏப்ரல் 1)ல் மாலை பரிவேட்டை நடக்கிறது. திங்கள் மாலை, 6:00 மணிக்கு, பெருமாள், சேஷ வாகனத்தில்வைகுண்ட நாதன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது.