திருவாடானை, தொண்டி அருகே சோலியக்குடி மகாலிங்கம்கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜைகளும், தீபராதனைகளும் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நேற்று காலை 9:00மணிக்கு கும்பத்தில் புனித நீர் ஊற்றபட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.