Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம் விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம்! சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பக்தர்களே நான்கு வழிச்சாலையில் கவனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஜன
2012
11:01

தைப்பூசத்தை முன்னிட்டு, பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு செல்லத்துவங்கி விட்டனர். மதுரை,ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து, பாதயாத்திரை செல்பவர்கள் பெரும்பாலும் நான்குவழிச்சாலையை பயன்படுத்துகின்றனர். சாலையில் அதிவேகமாக வாகனங்கள் செல்லும். இரவில் பக்தர்கள் நடந்து செல்வதே, வாகன வெளிச்சத்தால், டிரைவர்களுக்கு தெரியாது. எனவே பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்வது அவசியம். இது குறித்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் தரும் "டிப்ஸ்...

*நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் வரும் திசைக்கு நேர் எதிராக, வலது ஓரமாக செல்ல வேண்டும்.
*இரவு நேரத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
*சாலையில் பாதசாரிகளுக்கான வழித்தடம் இருந்தால், அதன் வழியாக தான் செல்ல வேண்டும்.
*சாலையை அடைத்தபடி கூட்டமாக செல்லக்கூடாது. சாலையோரம் இடைவெளி விட்டு வரிசையாக செல்வது பாதுகாப்பானது.
*சாலையோரம் அமர்ந்து உணவருந்துவது, ஓய்வெடுப்பது கூடாது.
*யாத்திரையின் போது சாலையின் குறுக்கே செல்வது ஆபத்து.
*பாலத்தின் கைப்பிடி சுவற்றில் உட்காரக்கூடாது. பாலத்தின் நடை பாதையில் ஓய்வு எடுக்கக்கூடாது.
*ஆற்றில், குளங்களில் குளிக்கும்போது கவனம் தேவை.
*ஆடைகளை உயரத் தூக்கிப்பிடித்து கொண்டு செல்லக்கூடாது.
*அவசர போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் போன் எண்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆண்டின் பரிதாப பலி: பாதயாத்திரை பக்தர்கள் ஆண்டுதோறும் விபத்தில் பலியாவது தொடர்கதையாக உள்ளது. இந்த ஆண்டு தைப்பூச "சீசன் துவக்கத்திலேயே (ஜன., 5 காலை 11.30 மணி), மதுரை செல்லூர் 60 அடி ரோட்டை சேர்ந்த பாலமுருகன், 30, பலியானார். வாடிப்பட்டி- கொடைரோடு இடையே சென்றபோது, பின்னால் வந்த மினிலாரி இவர் மீது மோதியதில், அதே இடத்தில் இறந்தார்.

தனி நடைபாதை எப்போது:ரோட்டோரம் முள், கற்களை தவிர்க்க, பக்தர்கள் நடுரோட்டில் நடக்கின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில், பக்தர்களுக்கான "தனி நடைபாதை திட்டம் பரிசீலனையில் உள்ளது. தற்காலிகமாக, திண்டுக்கல்- பழநி வரை, நான்கு அடிக்கு ரோடு அகலப்படுத்தப்பட்டது. இதற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்ட போதும், பல இடங்களில் தார் மட்டும் பூசி மெழுகினர். பராமரிப்பு இல்லாததால், ரெட்டியார்சத்திரம், செம்மடைப்பட்டி (திண்டுக்கல் ரோடு); நீலமலைக்கோட்டை, ஸ்ரீராமபுரம், தருமத்துப்பட்டி, காமுபிள்ளைசத்திரம், காமலாபுரம் (மதுரை ரோடு); காரமடை, க.வேலூர், கரடிக்கூட்டம், ஆர்.வாடிப்பட்டி, சின்னாக்கவுண்டன் புதூர் (உடுமலை ரோடு) ரோடுகள் சேதம் அடைந்துள்ளன. இவற்றில் பக்தர்கள் நடப்பது சிரமம். இவற்றை சீரமைக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar