திருத்தணி: திருத்தணி, சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலில், ஏழாம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், காலை, 7:00 மணிக்கு ஒரு யாக சாலை, இரு கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. அனைத்து சன்னதிகளிலும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.