சுந்தரேஸ்வரர், மீனாட்சி, திருமணம் செய்து வைக்கும் மகாவிஷ்ணு ஆகிய மூவரும், மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள கல்யாண சுந்தரர் சன்னதியில் காட்சி தருகின்றனர். இது சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. திருமண யோகம் உண்டாகவும், திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் இங்கு வழிபடுகின்றனர்.