Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் நாளை! திருப்பரங்குன்றம் எண்ணெய் காப்பு விழா நிறைவு! திருப்பரங்குன்றம் எண்ணெய் காப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.1 கோடி மதிப்பிலான தேர் வெள்ளோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜன
2012
10:01

கும்பகோணம் : திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள, அம்பாள் தேர் வெள்ளோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான, பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்க பெருமான் கோவில் உள்ளது. மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்த இங்கு, தேரோட்டம் பிரசித்தி பெற்றது. தேரோட்டம் நடைபெறாமல் நின்று, பல ஆண்டுக்கு பின், 2007ம் ஆண்டு, மகாலிங்கசுவாமி சேவா அறக்கட்டளை துவக்கப்பட்டு, தேர்த் திருப்பணி துவங்கப்பட்டது. அப்போது, பக்தர்களின் நன்கொடை மூலம், 5 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து தேர் திருப்பணிகள் செய்துவிட திட்டமிடப்பட்டது. அதன்பின், முதலில் தேரடி விநாயகர் கோவில் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஐந்து தேரடி மண்டபங்களும், திருப்பணி செய்யப்பட்டன. 2010ம் ஆண்டில், தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. 2011ம் ஆண்டின், தைப்பூச பெருவிழாவில், சுவாமி தேரோட்டம், அதி விமரிசையாக நடந்தது. இந்த ஆண்டுக்கான தேர்த் திருப்பணி பணி நிறைவுற்ற நிலையில், நேற்று அம்பாள் தேர் வெள்ளோட்டம் நடந்தது.தேருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு கட அபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar