Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவலூர்பேட்டை கோவிலில் சிவபெருமான் ... சபரிமலையில் நாளை! சபரிமலையில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எருமேலி பேட்டைத்துள்ளல் நிறைவு,திருவாபரணம் புறப்படுகிறது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2012
10:01

சபரிமலை : அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத்துள்ளலுடன் எருமேலி பேட்டைத்துள்ளல் நிறைவு பெற்றது. இன்று பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது.சபரிமலையில் மகரவிளக்கு பெருவிழா வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலியில் நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத்துள்ளல் பிரசித்தி பெற்றது. இந்த பேட்டைத்துள்ளலுக்கு பின்னர் எருமேலியில் பேட்டைத்துள்ளல் நடைபெறாது. அதன் படி நேற்று பகல் 12. 30 மணியளவில் ஆகாயத்தில் வட்டமிட்ட கருடனை கண்டதும் அம்பலப்புழா பக்தர்கள் பேட்டைத்துள்ளல் தொடங்கினர். இவர்கள் எருமேலி சிறிய சாஸ்தா கோயிலில் இருந்து நெற்றிப்பட்டம் கட்டிய யானையுடன் வந்த இவர்கள் வாவர் பள்ளிக்கு சென்றனர். அங்கிருந்து பள்ளி நிர்வாகிகளுடன் பேட்டை துள்ளி பெரிய சாஸ்தா கோயிலுக்கு சென்றனர். மாலை மூன்று மணிக்கு ஆகாயத்தில் தெரிந்த நட்சத்திரத்தை கண்டதும் ஆலங்காடு பக்தர்கள் பேட்டை துள்ளல் தொடங்கினர். இவர்கள் வாவர் பள்ளிக்கு செல்லவில்லை. நேராக பெரிய சாஸ்தா கோயிலுக்கு சென்றனர். இந்த பேட்டை துள்ளல்களுடன் பேட்டைத்துள்ளல் நிறைவு பெற்றது. திருவாபரணம்: பந்தளம் மன்னர் வழங்கிய திருவாபரணங்கள் மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த திருவாபரணங்கள் இன்று அதிகாலை ஐந்து மணி முதல் பகல் 12 மணி வரை பந்தளம் பெரியக்கோயில் சாஸ்தா கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் பேடகங்களில் அடைக்கப்பட்டு திருவாபரண பவனி புறப்படும். இந்த பேடகங்களை கங்காதரன், சிவன், பிரதாபன் என மூன்று பக்தர்கள் எடுத்து வருகின்றனர். இன்று அயிரூர் புதியகாவு கோயிலிலும், நாளை ளாகா சத்திரத்திலும் தங்கும் இந்த பவனி 15-ம் தேதி மாலையில் சன்னிதானம் வந்தடையும். சுத்திகிரியைகள்: மகரவிளக்குக்கு முன்னோடியாக சன்னிதானத்தில் நடைபெறும் சுத்திகிரியைகள் இன்று தொடங்குகிறது. இன்று மாலை தீபாராதனைக்கு பின்னர் பிரசாத சுத்தி பூஜைகளும், நாளை உச்சபூஜைக்கு முன்னதாக பிம்பசுத்தி பூஜைகளும் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு தலைமையில் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் ... மேலும்
 
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
அவிநாசி; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar