சுற்றுலாத் தலமான சிம்லாவில் ஜக்குமலைப் பகுதியில் உயரமான அனுமன் சிலை திறந்தவெளியில் நிறுவப்பட்டுள்ளது. ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வந்த பின்னர், ஜக்கு மலைக்குச் சென்று ஓய்வெடுத்தாராம். அதன் நினைவாக இங்கு அனுமனுக்கு ஒரு கோயிலும் கட்டப்பட்டுள்ளது.