சிவகாசி : சிவகாசி விஸ்வநாதசுவாமி, விசாலாட்சியம்மன் வீற்றிருக்கும் சிவன் கோயிலில் வைகாசி பிரமோற்சவ விழா மே 17 ல் கொடியேற்றத்துடன்துவங்கி நடந்து வருகிறது. 4ம் நாள் விழாவில் திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் 501 திருவிளக்குகளை ஏற்றி வழிப்பட்டனர். சிறப்புஅலங்காரத்தில் விஸ்வநாததர், விசாலாட்சியம்மன் ,பிரியாவிடையுடன் காட்சி அளித்தார். மே., 23 ல் தபசு காட்சி , 25ல்தேரோட்டம் நடக்கிறது.