சென்னிமலை மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2018 11:05
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த, முகாசிபிடாரியூர் பூங்கா நகரில், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பொங்கல் விழா, கடந்த, 16ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல், நாள்தோறும் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் (மே 24)ல் காலை, பொங்கல் வைபவம் நடந்தது. ஏராளமானோர் பொங்கல் வைத்தும் ஆடு, கோழி பலியிட்டும் அம்மனை வழிபட்டனர். அன்றிரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மே 25)ல் மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவு பெற்றது.