பதிவு செய்த நாள்
26
மே
2018
11:05
கோபி: கோபி, கடத்தூர் அருகே, சாணார்பாளையத்தில், குன்னாங்கல் கருப்பண்ணசாமி கோவி லில், கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் (மே 24)ல் யாகம், மகா கணபதி ஹோமம் நடந்தது. பின் காப்பு கட்டுதல், பூர்ணாஹூதி, தீபாராதனை, காவிரியில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று (மே 25)ல் காலை, 7:20 மணிக்கு, மகா தீபாராத னை, யாத்ரா தானம் நடந்தது. இதை தொடர்ந்து, 8:20 மணிக்கு, அனைத்து மூலாலய மூர்த்திகளு க்கும், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. கோபி, அரசூர், கடத்தூர், சாணார் பாளையத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.