Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் வைகை ஆற்றில் தீர்த்தவாரி ... தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக நன்மைக்கு யாகம் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும் ராமேஸ்வரம் தர்மர் தீர்த்தம்
எழுத்தின் அளவு:
விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும் ராமேஸ்வரம் தர்மர் தீர்த்தம்

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2018
11:06

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில், பசுமை ராமேஸ்வரம் அமைப்பு சார்பில் புனரமைக்கப்பட்டுள்ள தர்மர் தீர்த்தம், விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.


புண்ணியதலமான ராமேஸ்வரத்தில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவின் பசுமை ராமேஸ்வரம் அமைப்பு சார்பில் பல்வேறு சமூக மேம்பாட்டு பணிகள், ஆன்மிக பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் பழமையான 28 தீர்த்தங்கள் புனரமைக்கப்பட்டன. இவற்றில் ஏற்கனவே பாழடைந்து கிடந்த நான்கு தீர்த்தங்கள் சீரமைக்கப்பட்டன; 24 தீர்த்தங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவை. அதில் ஒரு தீர்த்தமாக, ராமர் பாதத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் தர்மர் தீர்த்தம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து பசுமை ராமேஸ்வரம் மைய பொறுப்பாளர் ஸ்ரீதரன் கூறியதாவது:விவேகானந்தா கேந்திரா செயலாளர் வாசுதேவன் தலைமையில், ராமேஸ்வரத்தின் அறியப்படாத ஆன்மிக சிறப்பை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஸ்கந்த புராணத்தில், தர்மர் தீர்த்தம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு விவேகானந்தா கேந்திராவின் சரஸ்வதி ஆய்வு நடத்தினார். பழையகாலத்தில் இருந்த வரைபடங்கள், முதியோர்கள் கூறிய அடையாளங்கள், வருவாய்த்துறை ஆவணங்களை கொண்டு தேடி சரிப்பார்த்த போது, ராமர் பாதம் அருகே இந்த தீர்த்தம் மணலில் புதைந்து கிடப்பது தெரியவந்தது.


இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த பகுதியை, அவர்கள் அனுமதியோடு புனரமைக்க முடிவு செய்தோம். கலெக்டர் நடராஜன் ஒத்துழைப்பு அளித்தார். விவேகானந்தா கேந்திரம் ஏற்பாட்டில், எட்டு லட்சம் ரூபாய் செலவில் இப்போது புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன.ராமர் பாதம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், விரைவில் தர்மர் தீர்த்தத்தையும் தரிசிக்கலாம். தர்மர் தீர்த்தம் மரண தோஷம், எம பயம் தீர்க்கும் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
மயிலம்; மயிலம் முருகன் கோவிலில் தை மாத கிருத்திகை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 6:00 ... மேலும்
 
temple news
 திருத்தணி; திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள சாய்நகரில், ஷீரடி சாய்பாபா கோவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்; ‘அரோகரா’ கோஷத் துடன் பக்தர்கள் புடைசூழ சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் தை கிருத்திகை சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar