தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை மற்றும் பஜன் மற்றும் விளக்குப் பூஜை, ஆன்மிக சொற்பொழிவுநடந்தது. மலைக்கோயிலில் தேரோட்டம், அன்னதானம் நடந்தன. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சின்னாளபட்டி: கார்த்திகையை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, சதுர்முக முருகனுக்கு பாலாபிேஷகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி தோணிமலை முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் கார்த்திகை சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.