பதிவு செய்த நாள்
13
ஜூன்
2018
12:06
திருப்பூர்: பூமலுார், புனித அந்தோணியார் ஆலயத்தில், தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. மங்கலத்தை அடுத்த பூமலுாரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ்லாஸ் தலைமை வகித்தார். பங்கு குரு குழந்தைராஜ் முன்னிலை வகித்தார். கொடியேற்றத்தை முன்னிட்டு, சிறப்பு கூட்டு பாடற்பலி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவில், இன்று காலை புனித அந்தோணியார் திருவிழா திருப்பலி பூஜை, வரும் 16ம் தேதி மாலை, சிறப்பு கூட்டு பாடற்பலி பூஜையும் நடக்கிறது. அதன்பின், மின் விளக்கு அலங்காரத்துடன் தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. வரும் 17ம் தேதி, தேரோட்டம் நடக்கிறது. சிறப்பு வழிபாடுகளுக்கு பின், வேண்டுதல் தேர் பவனியும், குருத்துவ கல்லுாரி நிறுவனர் ஸ்தனிஸ்லாஸ் தலைமையில், கூட்டு பாடற்பலி மற்றும் மறையுரையும் நடைபெறுகிறது. மாலை 5:30 மணிக்கு அலங்கார தேர் பவனி நிகழ்ச்சி நடைபெறும்.