● பொறுமையுள்ளவர்கள் பூமியையே அழகாக்கி, அமைதிப் பெருக்கில் பேரானந்தம் அடைவார்கள். ● உன்னுடைய கண் தீமையானதாயிருந்தால், உன் உடல் முழுதும் இருள் சூழ்ந்திருக்கும். எனவே கண்களால் ஒளி பொருந்தியவற்றை மட்டும் பார்க்கப் பழகு. ● தீயவர்களை பார்த்து எரிச்சல் அடையாதே, பொறாமை கொள்ளாதே. ஏனெனில் அவர்கள் புல்லைப் போல வெகு சீக்கிரத்தில் வாடிப்போய் விடுவார்கள். ● அகங்காரமானவர்களை எச்சரியுங்கள். பலகீனமானவர்களை தேற்றுங்கள். ● உங்கள் நாக்கினை கபடமான பேச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது நரகத்தில் தள்ளும் அளவு வலிமையானது. ● நாம் இந்த உலகத்திற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை; ஒன்றையும் கொண்டு போகப் போவதுமில்லை. – பைபிள் பொன்மொழிகள்