அசோகவனத்தில் இருந்த சீதையைக் கண்ட ஆஞ்சநேயர், ‘கண்டேன் கற்பினுக்கு அணியை கண்களால்’ என்று ராமனுக்கு தெரிவித்தார். ராமனுக்கு இச்செய்தி காதில் தேன் பாய்ந்தது போல இனித்தது. ஆஞ்சநேயருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என நீண்ட நேரம் யோசித்தார் ராமர். என்ன கொடுத்தாலும் ஈடாகாது என்ற முடிவுக்கு வந்தவராக, ஆஞ்சநேயரைத் தழுவிக் கொண்டார்.சீதைக்கு அடுத்தபடியாக, ராமனின் தோள்களைத் தழுவும்பாக்கியம் ஆஞ்சநேயருக்கு கிடைத்தது. இதையே, நம்மாழ்வார் தன் பாடலில்,‘பகவான் தன் நிஜமான அடியார்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று எப்போதும் காத்திருக்கிறார்’ என்று குறிப்பிடுகிறார்.