பெருமாள் கோவில்களில், மார்கழியில் ஆண்டாளின் திருப்பாவை பாடப்படும். ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்’ என்னும் பாசுரத்தில் தொடங்கி, ஆரம்பித்து தினமும் ஒரு பாட்டு வீதம் பாடுவர். இதற்கு ‘நாள் பாட்டு’ என்று பெயர்.இதன் காரணமாக, அந்த காலத்தில் மார்கழியில் எழுதப்படும் கடிதங்களில் தேதியைக் குறிப்பிடாமல் அந்தந்த நாளுக்குரிய பாசுரத்தின் முதல் வார்த்தையை எழுதும் மரபு இருந்தது.ஸ்ரீவில்லிபுத்துõர், ஸ்ரீரங்கம் போன்ற திவ்யதேச பகுதிகளில் இதைக் கடைபிடித்தனர். உதாரணமாக ‘மாயனை’ என்றால் மார்கழி ஐந்தாம் தேதி, வங்கக்கடல் என்றால் மார்கழி 30ம்தேதி என்று தெரிந்து கொண்டனர்.