நொச்சலுார் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2018 11:07
அவலுார்பேட்டை: நொச்சலுார் கிராமத்திலுள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா நொச்சலுார் கிராமத்தில் பழமையான தர்மராஜா சமேத திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா, 17ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 24 நாள் நடக்கும் இந்த விழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், பிற்பகலில் கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவும் மற்றும் 14 நாட்கள் இரவில் நாடகமும் நடந்தது. நேற்று மதியம் துரியோதனன் படுகள நிகழ்ச்சியும் மாலையில் தீ மிதி விழாவும் நடந்தது. இதில் செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.