பதினான்கு ஆண்டுகள் ராமன் காட்டுக்குச் சென்ற போது, உடன் சென்றவன் லட்சுமணன். யாரும் லட்சுமணனை ராமனுடன் உடன் செல்லும்படி வற்புறுத்தவில்லை. ஆனாலும், லட்சுமணன், ராமனுக்காக சேவை செய்யும் நோக்கத்துடன் அயோத்தியை விட்டுப் புறப்பட்டான். இதனை வால்மீகி, ‘லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பந்ந:’ என்று வர்ணிக்கிறார். அரண்மனை வாழ்வைவிட, அழியாத செல்வமான பரம்பொருளான ராமனுடன் இருப்பதே சிறந்த செல்வம் என லட்சுமணன் நினைத்தானாம். இதை ‘லட்சுமி சம்பந்தம்’ என்கிறார் வால்மீகி. கடவுளை வணங்கும் எல்லா நேரமும் நமக்கும் லட்சுமி யோகமே என்பது இதன் மறைபொருள்.