முற்பிறவியில் நாம் செய்த வினைகளே பாவபுண்ணியங்களாகி, இப்பிறவியில் நம்மைத் தொடர்கிறது. இதனையே ‘கர்மவினைப் பயன்’ என்கிறோம். திருவள்ளுவர் இதனை ‘வகுத்தான் வகுத்த வகை’ என்று குறிப்பிடுகிறார். ‘நீ கொடுத்து வச்சவ’ ‘நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான்’ ‘எல்லாம் என் தலையெழுத்து’ ‘விதிப்பயன்’ என்று சொல்வதெல்லாம் முன்ஜென்ம கர்ம வினையைத் தான். இந்தியச் சமயங்கள் இந்த கோட்பாட்டை ஏற்றுக் கொள்கின்றன.