பதிவு செய்த நாள்
14
ஜூலை
2018
12:07
சென்னை: சென்னை,சோழவரம் அருகே, தங்கவேல் முருகன் கோயிலில், பல லட்சம் ரூபாய் மதிப்புடைய மரகத சிலை மற்றும் வெள்ளி வேல் மாயமாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த எடப்பாளையத்தில், தங்கவேல் முருகன் கோயில் உள்ளது.இந்த கோயிலை, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சிவகுமார், 75, என்பவர் கட்டியு ள்ளார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி, கோவிலை பராமரிக்கிறார்.இக்கோயிலில், கற்சிலையால் வள்ளி தெய்வானையுடன் முருகன் வீற்றுள்ளார். 1 அடி உயரமும், 1 கிலோ எடையும் உடைய, முருகன் மரகத சிலையும் இருந்தது.வெள்ளிக்கிழமைமற்றும் விசேஷ நாட்களில், மூலவர் சன்னதியில் வைத்து, மரகத சிலைக்கும் அபிஷேகம் நடைபெறும் என, கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 13)ல் காலை, மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டிருந்த மரகத சிலை மற்றும் வெள்ளி வேல் மாயமானதாக, சிவகுமார், சோழ வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அவர் தெரிவித்ததாவது:முப்பது ஆண்டுகளுக்கு முன், வீடு கட்டுவதற் காக பள்ளம் தோண்டிய போது, மரகத சிலை கிடைத்தது. இதனால், இங்கேயேமுருகன் கோயில் கட்டி, பராமரிக்கிறேன்.நேற்று (ஜூலை 13)ல் காலை, பூஜைக்காக, வெள்ளி தட்டில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேலுடன் இருந்த மரகத சிலை மாயமாகியுள்ளது, என்றார்.
திருடு போனமரகத சிலை, பல லட்சம் ரூபாய் மதிப்புடையது என, கூறப்படுகிறது. சோழவரம் போலீசாரும், சிலை கடத்தல் பிரிவு போலீசாரும், தீவிரமாக விசாரிக்கின்றனர்.