பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து அம்மனை தரிசிக்கின்றனர்.பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், அம்மனுக்கு புடவை கொடுத்து வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது. இவ்வாறு கோவிலுக்கு வரும் புடவைகள் வாரந்தோறும் ஏலம் விடப்படுகிறது.இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் மல்லிகா தலைமையில் ஏலம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட புடவை ஏலம் விடப்பட்டு, ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து, 870 ரூபாய் வசூலானது. இதில், கோவில் இணை ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர், கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.