Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் விளக்கு ஏற்றி வழிபட வழியின்றி வேதனை திருப்பரங்குன்றம் கோயிலில் விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா மானாமதுரையில் கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா மானாமதுரையில் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2018
11:07

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பழமை மாறாமல் வருடந்தோறும் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆடி முளைப்பாரி உற்ஸவ பொங்கல் விழா துவங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம்,பறவை காவடி, அலகு குத்தி எடுத்து வந்து பூக்குழி இறங்கி அம்மனுக்கு பொங்கல் வைத்தும் முளைப்பாரி வளர்த்து அதனை முக்கிய வீதிகளின் வழியே கொண்டு வந்து அலங்கார குளத்தில் கரைத்து அம்மனை வழிபட்டனர். நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சளால் அபிேஷகம் செய்யப்பட்ட பின்னர் தெருக்களில் உறவினர்களுக்கிடையே மாமன்,மச்சான் முறை கொண்ட ஆண்கள் மீது பெண்களும்,முறை பெண்கள் மீது ஆண்களும் மாற்றி,மாற்றி மஞ்சள் தண்ணீர் உற்சாகமாக ஊற்றி கொண்டாடினர்.அந்தப்பகுதி முழுவதும்மஞ்சள் நிறம் படிந்த தண்ணீராக காணப்பட்டது.

கன்னார் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்42, என்பவர் கூறியதாவது: இந்த விழா தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆடி மாதம் விழாவின் போது நடைபெற்று வருகிறது, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட விழாவிற்காக இங்கு வந்து விடுவர், தங்களது உறவினர்கள் மீது மஞ்சள் தண்ணீரை மாற்றி,மாற்றி ஊற்றி கொண்டு சந்தோஷமாக இருப்பது வழக்கமாகி விட்டது, என்றார். ஜோதிகா 10, கூறுகையில்,இந்த விழாவில் எனது மாமா எனக்கு பயந்து கொண்டு வேறு இடத்திற்கு சென்று ஒளிந்து கொண்டார்,நான் அவரை தேடி கண்டுபிடித்து அவர் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றியதில் எனக்கு சந்தோஷமாக உள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar