பதிவு செய்த நாள்
03
ஆக
2018
01:08
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஆக., 8ல், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு, ஆக., 8ல், உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அரசு பாதுகாப்புக்கு, அவசர அலுவலர்கள் கவனிக்கும் பொருட்டு, மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். விடுமுறைக்கு மாற்றாக, அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், செப்., 8, சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.