கிறிஸ்து சபையில் போதகர்கள் சிலர் ஏழ்மை நிலையில் சேவை செய்து வந்தனர். ஒருமுறை அவ்வூரில் நடந்த திருமணத்தின் போது உணவு மீதமாகி விட்டது. அதை போதகர்களுக்கு கொடுத்து அனுப்பினார் மணமகனின் தந்தையான பணக்காரர். ஆனால் உணவு கொண்டு வந்தவரிடம், “ஐயா! உணவை ஏற்க இயலாதது குறித்து வருந்துகிறோம். நம் ஊரில் எத்தனையோ ஏழைகள் உள்ளனர். அவர்களுக்கு கொடுங்கள்,” என்றனர். நாடாளும் ராஜாவிடம் பணி செய்பவன் கவுரவத்தை விட்டுக் கொடுக்கக்கூடாது. ராஜாவின் அதிகாரி என்ற கவுரவம் இல்லாவிட்டால் ஊழியனின் தவறு ராஜாவுக்கு அவப்பெயரை உண்டாக்கும். இந்த போதகர்கள் போல சேவை செய்ய வேண்டுமே தவிர குறுக்கிடும் கஷ்டங்களை பெரிதாக நினைக்கக் கூடாது. ’பசித்த சமயத்திலும் தன்னைத் தேடி வரும் உதவிகளை ஒதுக்குகிறவர்களே கண்ணியவான்கள்’ என்னும் வசனத்தை அறிந்தவர்கள் இலவசத்தை ஏற்க விரும்ப மாட்டார்கள்.