Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
டயம் இல்லை என்று சொல்லாதீர்! ஆழ்ந்து படியுங்க மாணவர்களே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முழுசாக எதையும் நம்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2018
02:08

குமாரிலபட்டர் என்பவர் வேதங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். குமாரிலம், பாட்டப்பிரதீபம் ஆகிய நுõல்களை எழுதியவர். மண்டனமிசிரர் என்ற இவருடைய சீடர் மிகவும் புகழ்பெற்றவர். பட்டர் காலத்தில், வேதத்தை புத்தமதத்தினர் குறை கூறி வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென அவர் எண்ணம் கொண்டார். ‘புத்தமதக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளாமல்,எப்படி அதனைக் கண்டிப்பது?’ என்ற எண்ணம் மேலிட்டது. அதனால், ஒரு மாணவனைப் போல வேடமிட்டுக் கொண்டு புத்த குருகுலத்தில் சீடனாகச் சேர்ந்தார். குருமார்களிடம் நற்பெயர் பெற்றார். குருமார்களில் ஒருவர் ததாகதர். ஒருநாள் ததாகதர், பாடம் நடத்தும்போது வேதங்களையும், கடவுளையும் கடுமையாக நிந்தித்தார். அவருடைய வார்த்தைகள் அம்பைப் போல பட்டரின் மனதைக் குத்தியது. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. கண்ணீர் சிந்தும் குமாரிலபட்டர் ஒரு வேதியர் என்பதை ததாகதர் கண்டுபிடித்து விட்டார். அவரைக் கொல்ல எழுந்தார். ஐந்தாவது மாடியில் இருந்து அவரைக் கீழே தள்ளிவிட்டார். விழும்போது, “வேதம் உண்மையானால் நான் பிழைப்பேன்” என்று இருகரங்களையும் குவித்தார் பட்டர். கீழே விழுந்தும் பிழைத்துக் கொண்டார். ஆனால், ஒரு கண்ணில் மட்டும் பார்வை போனது.பார்வை இழந்ததற்கான காரணத்தை சிந்தித்தார். ‘வேதம் உண்மை’ என்று ஆணித்தரமாக நம்பாமல், அரைகுறையாக ‘வேதம் உண்மையானால்’ என்று சொன்ன காரணத்தால் தான் பார்வை இழந்ததை அறிந்து கொண்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar