Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
படித்தால் கைமேல் பலன் நட்பிற்கு அளவு அவசியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீமைக்கும் நன்மை செய்யுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2018
04:09

சிறுமி ஒருத்திக்கு இரண்டு கோழிக்குஞ்சுகள் பரிசாகக் கிடைத்தன. அன்றிலிருந்து கோழிக்குஞ்சுகளும் அவளும் இணைபிரியாத நண்பர்களாக மாறினர்.  தான் சாப்பிடும் போது அந்த குஞ்சுகளின் பசியாற்றி அவள் மகிழ்வாள். தான் தெருவில் செல்லும் போதெல்லாம் அவைகளையும் கூட்டிச் செல்வாள். தான் சேமித்த காசை செலவழித்து தானியம் வாங்கிக் கொடுப்பாள். அவளுடைய பராமரிப்பில் குஞ்சுகள் கொழுகொழுவென இருந்தன. ஒரு நாள் தற்செயலாக குஞ்சுகள் எதிர்வீட்டு தோட்டத்தில் நுழைந்தன. அதைக் கண்ட எதிர்வீட்டுக்காரர் குஞ்சுகளை அடித்து வேலிக்கு வெளியே வீசினார். அவை செத்துப் போய் தெருவில் விழுந்தன. அவ்வளவு தான்.. குஞ்சுகளைக் கண்ட சிறுமி மனம் உடைந்தாள். எந்த ஆறுதலையும் அவளது மனம் ஏற்கவில்லை. கதறி அழுதாள். சிறிது நேரம் கழிந்தது.  ஒருவழியாக சமாளித்துக் கொண்டு எழுந்தாள். இறந்த குஞ்சுகளை தன் பிஞ்சுக் கைகளால் எடுத்து அம்மாவிடம் ஓடி வந்தாள். அதை சமைத்து தரச் சொல்லிக் கேட்டாள். அம்மாவுக்கோ ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் சமைத்தார். சிறுமி அந்த உணவை முகர்ந்து கூட பார்க்கவில்லை. உணவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு எதிர்வீட்டுக்கு சென்றாள். “மாமா... நீங்கள் பசியாக இருப்பதால் உங்களுக்கு இந்த உணவை கொடுக்க சொல்லி ஆண்டவர் அனுப்பியுள்ளார்” என்று சொல்லி கொடுத்தவள், திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு நடந்தாள்.

அவளுடைய வார்த்தைகள்  சம்மட்டியால் அடித்தது போல காதில் விழுந்தது. செய்வதறியாமல் எதிர்வீட்டுக்காரர் தேம்பி அழுதார்.“நான் உங்களுக்கு சொல்கிறேன்; உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்” என்னும் “உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக் கொள்கிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடை பண்ணாதே” என்னும் பைபிள் வசனங்கள் அவரின் மனதில் எதிரொலித்தன. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar