Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெல்லை கம்பாநதி காமாட்சி அம்பாள் ... மருதமலை சுப்ரமணியர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவில் தைப்பூச தேரோட்ட விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2012
11:02

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், மூன்று நாள் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் நேற்று காலை 10.30 மணியளவில் கொடியேற்றும் விழா நடந்தது. பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ணமன்றாடியார், செயல் அலுவலர் பெரியமருது பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். பின் இரவு 7.00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை சுவாமி திருவீதி உலா மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. நாளை காலை மற்றும் மாலை சுவாமி திருவீதி உலாவில், பாதயாத்திரை செல்லும் சஷ்டி குழுவினர் கிரிவலம் வருகின்றனர். வரும் 6ம் தேதி இரவு 7.00 மணியளவில் திருவீதி உலா முடிந்து திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. பின், 7ம் தேதி மாலை 5.00 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளல், 5.00 மணிக்கு முதல் நாள் திருத்தேர் வடமும், வரும் 8, 9 தேதிகளில் மாலை 5.00 மணிக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் திருத்தேர் வடமும் பிடிக்கப்படுகிறது. வரும் 10ம் தேதி மாலை 6.00 மணிக்கு பரிவேட்டை தீர்த்தவாரியும் 11ம் தேதி காலை 9.00 மணிக்கு சுவாமி தரிசனம், இரவு 9.00 மணிக்கு கொடி இறக்கமும் நடைபெறுகிறது. 12ம் தேதி இரவு 7.00 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தேரோட்ட விழாவிற்கான ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர், செயல் அலுவலர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 ... மேலும்
 
temple news
தேனி: தேனி மாவட்டத்தில் சிவன், முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar