Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சங்ககிரி, மாரியம்மன் கோவிலில் ... பிள்ளையார்பட்டியில் சதுர்த்திவிழாவை முன்னிட்டு சிவபூஜை அலங்காரம் பிள்ளையார்பட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்திரிக்கை அச்சிட்டு.. அரசுக்கும், வேம்புக்கும் ‘டும்டும்
எழுத்தின் அளவு:
பத்திரிக்கை அச்சிட்டு.. அரசுக்கும், வேம்புக்கும் ‘டும்டும்

பதிவு செய்த நாள்

11 செப்
2018
10:09

பெ.நா.பாளையம், மக்கள் அனைத்து வளமும் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ , துடியலுார் அருகே அரச, வேம்பு மரங்களுக்கு திருமணம் நடத்தப்பட்டது. துடியலுார் ஜி.என்.,மில்ஸ் பிரிவு அருகே ஐ.டி.ஐ., பின்புறம் திருவள்ளுவர் நகர் உள்ளது.


இங்குள்ள அரச, வேம்பு மரங்களுக்கு இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து திருமணம் நடத்தினர். இதற்காக, 10 நாட்களுக்கு முன் திருமண பத்திரிக்கை அச்சிட்டு, வீடு, வீடாக வழங் கினர். மணமகன், மணமகள் வீட்டார் என, இரு பிரிவாக பக்தர்கள் பிரிந்து, சீர்வரிசை கொண்டு வந்தனர். மண மகனான அரச மரத்துக்கு பட்டு வேட்டி, சட்டை அணிவிக்கப்பட்டு மண மகன் கோலத்திலும், வேப்ப மரத்துக்கு பட்டுப்புடவை, பூ அணிந்து மண மகள் கோலத்திலும் அலங்கரிக்கப்பட்டது. திருமாங்கல்யத்தை பொதுமக்கள் சீர்வாதம் செய்து கொடுக்க, மேள, தாள ம் முழங்க குருக்கள் முன்னிலையில் அரசு, வேம்பு திருமணம் நடந்தது. சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்­பாரி கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பால்குடங்கள், சீர்வரிசை, வேள்வி வழிபாடுகள் நடந்தன. பொதுமக்கள் கூறுகையில், ‘அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்தால், அப்பகுதியில் நிலவும் தோஷம் நீங்கும். தடைபட்ட திருமணம் விரைவில்கை கூடும். போதுமான மழை பொழிந்து, நாடு சுபிட்சம் ஏற்படும் என்பது ஐதீகம்’ என்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்; பின், அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar