Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பிள்ளையார்பட்டியில் ... உத்திரகோசமங்கை அருகே கொம்பூதி கண்ணபிரான் கோயிலில் சர்வ அலங்காரத்தில் விநயாகர் உத்திரகோசமங்கை அருகே கொம்பூதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி பெருமாள் கோயில் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி பெருமாள் கோயில் தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா

பதிவு செய்த நாள்

11 செப்
2018
11:09

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் தெப்பக்குளத்தை சீரமைத்து பாது காக்க பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சிவகங்கை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இக்கோயில் முன்புறம் பழமையான தெப்பக்குளம் உள்ளது. 

இக்குளத்து தண்ணீர் அசுத்தமாக இருப்பதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். முடி
காணிக்கை செலுத்தும் பக்தர்கள் தெப்பக்குள தண்ணீரை உடம்பில் தெளித்துக் கொண்டு அருகில் உள்ள கிணறு, தொட்டி தண்ணீரை குளிக்க பயன்படுத்துகின்றனர்.

இக்கோயில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் தெப்பக்குளத்தில் வந்து சேர வசதியாக கால்வாய், பாலம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இக்கால்வாய் அருகிலேயே நகரின் கழிவுநீர் ஓடையும் செல்கிறது. மழைக்காலங்களில் இந்த இரு கால்வாய்களும் ஒன்றாக சேர்ந்து தெப்பக்குளத்தில் சாக்கடை நீரும், குப்பையும் கலந்து விடுகிறது.

அதோ குளத்தில் சேரும் கால்வாயின் உயரம் குறைவாக இருப்பதால் கூடுதல் தண்ணீர் தேங்க வழியில்லாமல் போய் விடுகிறது.எனவே இக்கல்வாய் தண்ணீரை மேற்கு படித்துறை வழியாக குளத்தில் சேரும் வகையில் அமைப்புகளை மாற்ற வேண்டும். நான்கு ரத வீதிகளில்
பெய்யும் பெரும்பாலான மழை நீர் கழிவு நீர் கால்வாயில் சென்று வீணாகிறது. இந்த  தண்ணீ ரும் கோயில் தெப்பக்குளத்திற்கு வரும் வகையில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை மாற்றி ஏற்படுத்த வேண்டும்.

இக்கோயில் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியிலும், தெப்பக்குளம் சிவபுரிபட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியிலும் வருகிறது. இதனால் இக்குளத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மீன் பாசி ஏலம் விடப்படுகிறது.

ஏலம் எடுப்பவர்கள் மீன்களின் உணவுக்காக பல்வேறு கழிவுகளை கொண்டு வந்து இக்குளத் தில் கொட்டி விடுகின்றனர். இதனால் தெப்பக்குளத்தின் புனிதம் பாதிக்கப்படுகிறது. இக்குளத்தில் வணிக நோக்கில் மீன்களை வளர்ப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்க
வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar