Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்: 226 ... புதுச்சேரி சொர்ணபைரவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2018
02:09

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நேற்று(செப்., 16ல்), கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13ம் தேதி கொண்டாடப்பட்டது. குடியிருப்போர் நல்வாழ்வு சங்கங்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் பெரிய அளவில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

ஐந்தாம் நாளான நேற்று (செப்., 16ல்), இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில், விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் சாரம் அவ்வை திடலில் துவங்கியது.

காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, பட்டேல் சாலை, பழைய சாராய ஆலை வழியாக, கடற்கரைக்கு மேள தாளம், ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.

கடற்கரை சாலை பழைய கோர்ட் அருகே, ராட்சத கிரேன் மூலம், பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. 200க்கும் மேற்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சிலைகளை கடலுக்கு கொண்டு செல்ல, பொதுப்பணித்துறை சார்பில், கடற்கரை பகுதியில் மணல் கொட்டி வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. விஜயர்சன நிகழ்ச்சியின்போது வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.

இந்து முன்னணி தமிழ் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், விநாயகர் சதுர்த்தி விழா பேரவை தலைவர் குமரகுரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சீனியர் எஸ்.பி., அபூர்வா குப்தா தலைமையில், எஸ்.பி,. மாறன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடலோர காவல்படையினர் கடலில், படகுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதே போன்று, புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு, தந்திராயன்குப்பம், நல்லவாடு உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று (செப்., 16ல்) விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar