பதிவு செய்த நாள்
22
செப்
2018
02:09
ஊத்துக்கோட்டை: ஆனந்தவல்லி உடனுறை திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், சனி பிரதோஷ விழாவை ஒட்டி, சிவபெருமான், நந்திக்கு இன்று (செப்., 22ல்) மாலை, 4:30 மணிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்டவற்றால், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, நந்திக்கு அருகம்புல், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெறும்.