பதிவு செய்த நாள்
16
ஏப்
2026
10:04
பெண்ணாடம்,: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் புதிய அம்மன் தேர் திருப்பணி முடிந்து, வெள்ளோட்டம் நடந்தது.
பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக மூலவர், அம்மன், விநாயகர் ஆகிய, 3 தேர்கள் இருந்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 3 தேர்களும் மர்மமான முறையில் எரிந்து சாம்பலானது. இதனால் பல ஆண்டுகள் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, கடந்த 2010ல் மூலவர் தேர் மட்டும் புதிதாக அமைத்து, சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது. அம்மன் தேர் மற்றும் விநாயகர் தேர் புதிதாக செய்ய கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, விநாயகர் தேர் திருப்பணி முடிந்து கடந்த மார்ச், 6ம்தேதி வெள்ளோட்டம் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து, அம்மன் தேருக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பொதுநல நிதி 28 லட்சத்து 30 ஆயிரம், கோவில் நிதி 28.30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி முடிந்தது. இதன் வெள்ளோட்டம் நேற்று காலை 10:00 மணியளவில் விநாயகர் வழிபாட்டுடன், தேருக்கு கலசாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து சென்று தேர் நிறுத்தும் இடத்தில் நிறுத்தினர்.