Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதுகுளத்தூர் விநாயகர் கோயிலில் ... விருதுநகர் துள்ளுமாரியம்மன் கோயில் புரட்டாசி விழா விருதுநகர் துள்ளுமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லாங்குடியில் பக்தர்கள் வினோத காணிக்கை
எழுத்தின் அளவு:
கொல்லாங்குடியில் பக்தர்கள் வினோத காணிக்கை

பதிவு செய்த நாள்

22 செப்
2018
04:09

காளையார்கோவில்: கொல்லங்குடி கோயிலில் வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் பூட்டுக்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்..

காளையார்கோவில் அருகேயுள்ள கொல்லாங்குடி வெட்டுடையார் காளி கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இங்குள்ள கருப்புசாமி சன்னதியில் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் நீண்ட அரிவாளை காணிக்கையாக வழங்குகின்றனர்.

அவை சுவாமி சிலை முன் வைக்கப்படுகிறது.இதன் அருகே உள்ள சூலாயுதத்தில் சமீப காலமாக பக்தர்கள் பூட்டுக்களை வாங்கி வந்து காணிக்கையாக செலுத்துகின்றனர்.
பூட்டுக்களை அங்குள்ள வளையங்களில் மாட்டி, பூட்டிய பிறகு சாவியை கோயிலின் உண்டியலில் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர்.

இதனால், கருப்பசாமி சன்னதியில் நாளுக்கு நாள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பூட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கோயில் பணியாளர் ஒருவர் கூறுகையில், ""வெட்டுடையார் காளியிம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏதாவது ஒரு நீண்ட நாள் நிறைவேறாத கோரிக்கையுடன் தான் வருவார்கள்.

வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போர் காலி செய்ய மறுத்தால் அவர்களுடன் வாதிட்டு, கோர்ட்டுக்கு அலைய நேரிடும்.

பல வருடங்கள் ஆனாலும் வழக்கு முடிவுறாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு பூட்டை விலைக்கு வாங்கி வந்து இங்குள்ள

கருப்பசாமி சன்னதி முன் கம்பியில் பூட்டி விட்டு சாவியை உண்டியலில் போட்டு விடுகிறார்கள்.

சிலர் பூட்டுகளை பூட்டி விட்டு சாவியை எறிந்து விடுகிறார்கள். பிரச்னை தீர்ந்தவுடன் மீண்டும் கோயிலுக்கு வந்து அரிவாள் காணிக்கை  செலுத்துகிறார்கள், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar