பதிவு செய்த நாள்
24
செப்
2018
10:09
நாமக்கல்: புரட்டாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1,008 லிட்டர் பாலில் சிறப்பு அபி?ஷகம் நடந்தது. நாமக்கல், ஆஞ்சநேயருக்கு ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று, சிறப்பு அபி ?ஷகம் மற்றும் பூஜை நடைபெறும். நேற்று புரட்டாசி மாத முதல் ஞாயிறை முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. 11:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபி?ஷகம் நடந்தது. மதியம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.