பதிவு செய்த நாள்
08
அக்
2018
12:10
விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அமாவாசை பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதி முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் சுப்ரமணியன் பேசியதாவது: கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் தற்காலிக பஸ் நிலையங்கள், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், போக்குவரத்துத் துறை மூலம் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். பஸ்கள் ஒரே இடத்தில் நிறுத்துவதை போலீசார், இந்து அறநிலையத்துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, உறுதிசெய்து கொள்ள வேண்டும்.முழு சுகாதார திட்டம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்த வேண்டும். மின்சார வாரியம் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வபோது, ஏற்படும் மின் தடைகளை சரி செய்யவும், விழாக்காலங்களில் இரண்டு நாட்களிலும் மும் முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும்.இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலைங்களில் சி.சி.டி.வி., மூலம் கண்காணிக் கப்பட்டு பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை மூலம் மருத்துவக்குழு மற்றும் அவசர ஊர்திகள் கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., பிரியா, கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகாஷ் உட்பட அனைத்துத் துறை அலுவலர் கள் கலந்து கொண்டனர்.