Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குற்றாலநாதர் கோயிலில் தெப்ப உற்சவம் ... செண்பகாதேவியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்கரை பூபர் சாஸ்தா கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2012
11:02

தூத்துக்குடி:மணக்கரையில் உள்ள அனந்தநம்பிகுறிச்சி அருள்தரும் அழகிய பூபர் சாஸ்தா, பத்திரகாளி அம்மன், வண்ணியர் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று (9ம் தேதி) நடக்கிறது.பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகரால் தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை கிராமம் அனந்த நம்பிகுறிச்சியில் சுயம்பு மூர்த்தியாக இயற்கையான கல்பாறையில் எழுந்தருளி செய்யப்பட்ட ஆலயத்தில் பூபர் சாஸ்தா, பத்திரகாளி அம்மன், மாட்டுடையார், வண்ணியராயர் மற்றும் சகல பரிவார தெய்வங்களுக்கும் மூலஸ்தான மண்டபம், விமான கோபுரங்கள் அமைக்கப்பட்டு இன்று காலை மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேக முதல் நாள் நிகழ்ச்சியாக 7ம் தேதி மங்கள இசை, திருமுறை பாராயணம், எஜமான அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்ய பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதற்கால யாக பூஜைகளும் நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால பூஜையும், இரவு மூர்த்திகளுக்கு யந்திர ஸ்தாபனம், ரத்னன்யாசம், பிம்பசுத்தி நிகழ்ச்சியும் நடந்தது. மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு யாக சாலையில் இருந்து கும்பம் எழுந்தருளி மஹா கணபதி, பூபர் சாஸ்தா, பத்திரகாளி அம்மன் மற்றும் சகல பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணிக்கு வண்ணியர் சன்னதியில் கும்பாபிஷேகமும் மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணி கமிட்டி தலைவர் ராமசாமி தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar