பதிவு செய்த நாள்
23
அக்
2018
01:10
நாமக்கல்: ராசிபுரம், மாரியம்மன் கோவில் ஐப்பசி திருத்தேர் விழா, இன்று துவங்குகிறது. ராசிபுரம், நித்ய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி திருத்தேர் விழா, இன்று பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.
இரவு, 7:00 மணிக்கு கைலாச நாதர் கோவிலில் இருந்து, ஊர்வலமாக சென்று செல்லாண்டியம் மனுக்கும், மாரியம்மனுக்கும் பூச்சாட்டு விழா நடக்கிறது. வரும், 25 இரவு, 8:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா, இரவு, 10:00 மணிக்கு குழந்தை வரம் வேண்டு வோருக்கு தயிர் சாதம் வழங்கும் வைபவம். நவ., 6 காலை, 5:00 மணிக்கு பூவோடு எடுத்தல், இரவு, 8:00 மணிக்கு கொடியேற்று விழா; மறுநாள் காலை அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல்; 8 காலை, 5:00 மணிக்கு அக்னி குண்டம் பிரவேசித்தல், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடக்கிறது. நவ., 9ல் உடற்கூறு வண்டி வேடிக்கை; 10 இரவு மின்விளக்கு ஜோடனையுடன் புஷ்ப பல்லாக்கில் மாரியம்மன் பவனி, சப்தாபரணம்; நவ.,11ல் வசந்தோற் சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜகோபால், தக்கார் செல்வி, பக்தர்கள் மற்றும் மக்கள் செய்துள்ளனர்.